ஓம் நமோ நாராயணாய.
ஸ்ரீ ராமஜெயம்.
ஸ்ரீ எம்பெருமாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஜீயர் திருவடிகளே சரணம்.
திருக்கோவில் வளாகம்.
சென்னை-600 117, கீழ்க்கட்டளை, பெரிய தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயத்தின் நூதன ஆலய மகாசம்ப்ரோட்சண கும்பாபிஷேக வைபவத்துக்கு தங்களை அழைக்கிறோம்.
வருகிற 12.5.2013 சித்திரைத் திங்கள் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 7.45 மணி வரையிலான சுபவேளையில் கும்பாபிஷேக வைபவம் நிகழ உள்ளது.
பொது மக்களும், ஆன்மீக அன்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு எம்பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு வேண்டுகின்றோம்.
சிவராம பக்த ஜனசபை.
கீழக்கட்டளை.